புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது

கிளிநொச்சி – வட்டக்கச்சி மாயவனுார் காட்டுப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய 5 பேர் இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டபோதே இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை, கொழும்பு … Continue reading புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது